குறைந்த வருமானம் ஈட்டுபவர்களின் வருமானத்தை அதிகரிக்க சமூக சேவைகள் திணைக்களம் பல்வேறு திட்டங்களை நடத்துகிறது. கம்பாஹா மாவட்டத்தில் ஏற்கனவே குறைந்த எண்ணிக்கையிலான சுயதொழில் முயற்சிகளைத் தொடங்கியுள்ள சுயதொழில் செய்பவர்களின் குழுவுக்கு களனி பிரதேச செயலகப் பிரிவின் கலாச்சார மைய மண்டபத்தில் தொழில் முனைவோர் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. அவர்களை ஊக்குவிக்க தேவையான வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. பயிற்சித் திட்டத்திற்கிடையில் சுயதொழிலில் வெற்றிபெற விரும்பும் நபர்களை அடையாளம் காண்பது, அவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் பட்டறைகளை வழங்குவது, சுயதொழில் வெற்றிபெற உதவுவது, கடன் வசதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படுகின்றது. அவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்ட குழு தொழில் முனைவோர் பயிற்சிக்கு உட்பட்டு பொதியிடல் சந்தைப்படுத்துதல் தரம் மற்றும் தரப்படுத்தல் மற்றும் வணிக நெறிமுறைகள் குறித்து பல அமர்வுகளை நடத்தி அவர்களின் சுயதொழில்களை சிறப்பாக்கத் தேவையான மீள்பார்வை நடவடிக்கைகளை நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது .