தற்போது, மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களம், தந்தை, தாய்மார்களை இழந்த அல்லது தாய், தந்தை இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் குழந்தைகள் 6,000 க்கும் மேற்பட்ட வர்களுக்கு உதவித்தொகை வழங்குவது வருடாந்தம் இடம்பெறுகின்ற போதும், தாய் மற்றும் தந்தை வசிக்கின்ற போதும் சில காரணங்களினால் பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் கல்வி கற்கும் பெருமளவு பிள்ளைகள் இம் மாவட்டத்தில் வசிக்கின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பிள்ளைகளுக்காக அவர்களின் கல்வி நடவடிக்கையினை சிறப்பாக்கிக் கொள்ள எங்களது திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள துபுத்து மாப்பியா சரண செயற்றிட்டத்தின் கீழ் வளர்ப்பு உதவித்தொகை திட்டத்தினை 50 அனுசரணையாளர்களினால் வழங்தல், அந்த அனுசரணையாளர்களை பாராட்டுவது இங்கு மேற்கொள்ளப்பட உள்ளது. இது களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.